தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Thursday, October 21, 2010

மரம் சும்மா இருந்தாலும்.................. சிவசிதம்பரம், பட்டுக்கோட்டை.

     மரம் சும்மா இருந்தாலும் காற்று அதை இருக்க விடுவதில்லை என்ற பழமொழிக்கு ஏற்ப BSNLEU நமது அமைதித் தன்மையை பெரிதும் குலைத்து விடுகிறது.  நமது துறை மற்றும் தொழிலாளியின் முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாய் இருப்பது அரசின் கொள்கைகள் மட்டுமல்ல!   BSNLEU  வும் தான் என்பதை நாம் நன்கறிவோம்.  
     வாதாடவும் தெரியாது, போராடவும் தெரியாது.  ஆனால் வாய் மட்டும் நீளம் என்பதை அதனுடைய வெப் சைட்டைப் பார்த்தீர்களானால் தெரியும். 
     பெங்களூரில் 201 NFTE  தோழர்கள் BSNLEU விலே சேர்ந்து விட்டார்களாம். திடீரென்று  இப்போ அவர்கள் சேர்ந்ததற்கு என்ன காரணமாக இருக்கும்?  என்று எனக்கு ஒரே குழப்பம்! இரவு முழுதும் தூக்கமே இல்லை!   ஒரு வேளை, 
 இவர்கள் புதிய தோழர்களாக இருக்கக் கூடுமோ!  
இதுவரை வாங்காததை  விட இம்முறை அதிகமான போனசை வாங்கிவிடுவார்கள் என்ற நம்பிக்கையாக இருக்குமோ?  என்றெல்லாம் சந்தேகம் வந்தது.  சேச்சே, அந்த அளவுக்கா ஞாபக மறதி இருக்கும்.     இருக்காது! 
இந்தமுறையும் நாங்களே ஜெயித்து விட்டால் முதல் அங்கீகாரத்  தேர்தலிலே சொன்னோமே, பரீட்சையில்லாமல் அனைவருக்கும் பதவி உயர்வு, அதை இம்முறை கண்டிப்பாகப் பெற்றுத் தருவோம் என்று எவராவது சொல்லியிருப்பர்களா! 
என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை? தயவு செய்து உங்களுக்குத் தெரிந்தால் சொல்லி விடுங்கள்!  
   முப்பது ஆண்டுகால தொழிற்சங்க  வரலாற்றில் இந்த பூஜாவுக்கு போனசே  இல்லை என்று ஆக்கிய சாதனைக்காகத்தான் 201 NFTE உறுப்பினர்கள் விலகி இருப்பார்களோ!
    அல்லது நம்மால்தான் முடியவில்லை, புதிய அங்கீகார விதிகள் பேச்சு வார்த்தையைப் பயன்படுத்தி அதன் மூலமாவது ஒற்றுமையைக் கட்டி எதிர்காலத்தில் எல்லா சிக்கல்களையும் போக்கி விடுவார்  என்ற நம்பிக்கையை துண்டுத் துகளாய் உடைத்தெறிந்தரே! அந்தக்  காரியத்தை இனி செய்ய மாட்டேன் என்ற முடிவை எடுத்திருப்பாரோ! வேறு என்னவாக இருக்கும்?
  எழுதிக்கொண்டேயிருக்கலாம் என்கின்ற அளவுக்கு BSNLEU வின் சாதனைப் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது.   எப்படியும் அந்த 201 NFTE  உறுப்பினர்களை கண்டுபிடித்து விடுவோம்!
      ஸ்பெக்ட்ரம் புகழ் ராசாவின் ஆதரவு பெற்ற tepu சங்கத்தின்   துணையோடு,  புரட்சிகரமான  மாற்றத்தை, மார்க்சீய பார்வை கொண்டு   சாதிக்கலாம் என்ற BSNLEU சங்கம் இன்றைக்கு, நிர்வாகத்தின் ஆதரவோடு  பிப்ரவரி 2 ஆம் தேதி  என்று தேர்தலுக்கு நாள் குறித்து  விட்டது.    
அன்றைக்குத் தெரியும் அந்த உண்மை. 

வருகின்ற சரிபார்ப்பு தேர்தல் அனைவருக்குமே எச்சரிக்கை என்பதை உணர்வோம்.  









      


 
            

1 comment:

  1. welldone comrade , you have really done a wonderful job..
    With Regards...
    K.Natarajan(TNJ)

    ReplyDelete

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR