தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Monday, November 15, 2010

மாவட்டத்தின் தலைமை இன்று மறைந்தது!


     தஞ்சை மாவட்டத்தின் தன்னேரில்லா தலைவனாக மிளிர்ந்த நமது மாவட்டச் செயலர்  தோழர் கேசவன் இன்று 15-11-2010 மாலை 6 மணிக்கு நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்.   அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்துக்கு எப்படி ஆறுதல் சொல்லப் போகிறோம்.   புரியவில்லை. நம்மாலேயே தாங்க முடியவில்லையே, அவர் குடும்பம் இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியுமா.  யாராலும் ஈடு செய்ய முடியா இழப்பு.  

     மாவட்டச் செயலராய் கடந்த   19-06-2010 ஆம் தேதிதான் பொறுப்பேற்றார்.    5 மாதங்கள் கூட இன்னும் நிறைவடையவில்லை.    பொறுப்பேற்ற  இந்த குறுகிய காலத்திலேயே வியக்கத்தக்க சாதனைகளைப் புரிந்தார்.  தீர்க்கப்பெற்ற பிரச்சினைகள் ஏராளம். கட்டிய இயக்கங்கள் ஏராளம்.  பொது மேலாளரை சந்திக்காத நாளில்லை எனலாம்.   இந்த இணையதளம் கூறும் அவரின் செயலாற்றலை. 

     தோழனே ஏன் பிரிந்தாய்  எங்களை விட்டு.   எங்களுக்கு என்ன செய்தியை விட்டுச் செல்கிறாய்!  எங்களின் ஊனோடும், உயிரோடும் கலந்த உன்னைப் பிரிந்து எப்படி வாழப் போகிறோம்? 

     எப்படியோ என் தலைவன் இறந்த செய்தியைச் சொல்லிவிட்டேன்!

                                                 சிவசிதம்பரம். பட்டுக்கோட்டை.
     

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR