தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Monday, December 6, 2010

குடந்தைத் தந்தைக்கு குதூகல விழா!

    விழாவினைப் பார்த்து ரசித்து வந்த பின் இந்தத் தலைப்புதான் தோன்றியது.  ஆம் குடந்தையின் இளம் சிங்கங்கள் எல்லா வகையிலும் திறம்பட நடத்திக் காட்டிய விழா என்றால் மிகையாகாது. 
     தமது பணியினை மிக நிறைவாக, மிக, மிக நிறைவாக செய்து (முடித்து) ஓய்வு பெறுகிறார் என்பதை விழா  மெய்ப்பித்தது. 
     அனைத்துக் கட்சி நண்பர்கள், பல்வேறு இயக்கத் தோழர்கள் உவகையோடு பங்கேற்றுப் பேசினார்கள்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள்  நல்லக்கண்ணு,  AITUC பொது செயலாளர் S.S. தியாகராஜன், தலைவர் A.M. கோபு ஆகியோர் சிறப்புக்களைச் சொல்லி வாழ்த்தினார்கள். நமது தலைவர்கள் ஏறக்குறைய அனைவருமே பங்கேற்றார்கள். RK, பட்டாபி, தமிழ்மணி, N. வீரபாண்டியன்,   G. ஜெயராமன், S.S. கோபாலகிருஷ்ணன், K.S.K, குடந்தை மாலி ஆகியோரின் பேச்சுக்கள் அனைவரையும் நெகிழ வைத்தது.   
     தோழர் ஜெயபால் அவர்கள்  மகளின் பேச்சு கருத்து மிகுந்த பேச்சு. ( மீன் குஞ்சுக்கு  நீந்தக்  கற்றுக் கொடுக்கவா  வேண்டும்).   R.K அவர்கள் குறைந்த நேரத்தில் நிறைவான  உரையினைத் தந்தார்.  அறக்கட்டளைப் பணியினைத் துவக்கிட ஜெயபால் அவர்களை கேட்டுக் கொண்டு  ரூபாய் 1001 கொடுத்து துவக்கி வைத்தார்.   ரூபாய் ஒரு லட்சத்திற்கு தானே பொறுப்பேற்பதாக உறுதி அளித்தார்.
     அற்புதமான வரவேற்பு, உபசரிப்பு, விருந்து. இன்னும் எவ்வளவோ.

     தலைவரின் ஓய்வுக் காலம் அவருக்கு மேலும் மன மகிழ்ச்சியை, நல்ல உடல் நலத்தை பெற்று சிறப்புடன் வாழ நமது தஞ்சை வலைத  தளமும்  வாழ்த்தி மகிழ்கிறது. 

தோழமையுடன்,
K. நடராஜன், S. சிவசிதம்பரம் 
தமிழ் மாநில சங்கப்  பொறுப்பாளர்கள். 







No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR