தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Sunday, January 9, 2011

நடந்தது என்ன? தோழர் பட்டாபியின் (Audio) பேட்டியிலிருந்து ஒரு பகுதி:

                                                                                                    PART - 2.
துறைக்கு  நஷ்டம்:
       அதே மாதிரி கடந்த 9 ஆண்டுகளள லாபம்  சம்பாதித்த BSNL முதன் முறையாக  நட்டம் என்று வந்ததும் இவர்கள் காலத்தில்தான்.   நிர்வாகச் சீர்கேடுகள், நிதி ஒழுங்கீனங்கள்  போன்ற எல்லாவற்றையுமே தட்டிக் கேட்காமல் இன்னைக்கி BSNLEU    கண்காணிக்க  வேண்டிய  கடமையிலிருந்து  தவறியதால  நஷ்டம்  வந்திச்சு.  

போனஸ் போச்சு:
     அதே மாதிரி இன்னைக்கி தொழிலாளிக்கு போனஸ் இல்லை என்ற நிலைமை உருவாகி இருக்கு. 30 ஆண்டுகளுக்கு மேலாக, 1979 வாக்கில, போனசே இல்லாத காலத்துல, ரயில்வேயும் நாமும் போராடி, மத்திய அரசு ஊழியருக்கு போனசா என்று கேலி செய்கிற காலத்தில ரயில்வே, நாமெல்லாம் சேர்ந்து சண்டை போட்டு வாங்கின ஒன்று இன்னக்கி இல்லாம போயிருச்சு.   அது ஒயர்ந்து கிட்டே போயி 77 நாள் வரைக்கும் போச்சு.       அதற்குப் பின்னால இன்னைக்கி என்னாச்சி?   நட்டம் வந்தா போனஸ் இல்லைன்னு ஆச்சி. அப்போ PLB போனசாக இருந்திச்சு.  எவ்வளவு உற்பத்தி அதிகமாச்சுதோ அதுக்கு தகுந்தமாதிரி போனசும் உயர்ந்து கொண்டே போச்சு.       இப்பொழுது உற்பத்தி அதிகமாயிருக்குது.  ஆனா விலை    குறைப்பின் காரணமாக அல்லது    TARIFF வீழ்ச்சியின் காரணமாக வருவாய் குறைந்தது.  லாபத்தோடு, BSNL லோட  வருவாயைக் கட்டிப் போட்டு, இதையெல்லாம்  BSNLEU ஏற்றுக் கொண்ட காரணத்தால்  லாபம் இல்லை, அதனால் உங்களுக்கு போனஸ் இல்லை என்று BSNL சொன்னதை இவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.             முதன் முதாலாக எல்லோரும் போனஸ் வாங்கும்போது, நமக்கு இல்லாமப் போச்சு. ED க்குப் போனஸ், இன்னைக்கி CONTRACT LABOUR க்கெல்லாம் போனஸ் வாங்கித் தந்த நமக்கு போனஸ் இல்லை என்ற நிலை வந்திருக்கிறது.    அதையெல்லாம் எதிர்த்து BSNLEU  வால  போராட முடியாம நமது உரிமையை கை விட்ட நெலமை வந்தாச்சு.  

தலைக்கு மேலே தொங்கும் கத்தி:  
     அதே மாதிரி கார்ப்பொரேஷன்  உருவாகும்போது தோழர் குப்தா  அவர்கள் மூணு நாட்கள், 90 % ஊழியர்களை வைத்துப்  போராடி பென்சன் உண்டு என்ற நிலைமையை பெற்றோம்.  அன்றைக்கு BSNLEU தோழர்கள் போராடவில்லை.       அப்போது BSNL ன்   நிதியாதாரம், பணிபாதுகாப்பு போன்ற கோரிக்கைகளும் வைத்துப் போராடினோம். வெற்றியும் கண்டோம்.  அப்போ BSNLEU தோழர்கள் கிண்டலடித்தார்கள்.      வாஜ்பாய் காலத்திலே அந்தப் போராட்டம் மாபெரும் வெற்றி பெற்று, பென்சன் உறுதியும் செய்யப்பட்டது.          அரசாங்கமே பென்சனைக் கொடுக்கும் என்ற உறுதிமொழியை வாங்கினோம்.  அது மட்டுமல்ல Consolidated fund of India பண்டிலிருந்து பணத்தை எடுத்து மத்திய அரசாங்கமே கொடுக்கும் என்ற உறுதிமொழியை பெற்று இன்று பென்சன் வாங்கி வருகிறோம்.  இவர்கள் ஆட்சி காலத்திலே, 2006 லே திடீரென்று 100 % Pension liability யை அரசு ஏற்கும் என்ற நிலைபாட்டிலிருந்து மாறி  எங்களுக்கு வருகின்ற வருவாயில 60 % க்கு மேலே பென்சனை நாங்க ஏற்க மாட்டோம் என்கின்ற ஒரு புதிய விதியைப் போட்டு சிக்கலுக்கு உள்ளாக்கி அது DOT க்கும்,  மத்திய அரசுக்கும் என்ற நிலைமையில் போய்க் கொண்டிருக்கிறது.   இருந்தாலும் அது 2006 லிருந்து இன்று வரைக்கும் தலைக்கு மேலே தொங்கிக்கொண்டிருக்கின்ற கத்தியாகவே இருக்கிறது.           பென்சனுக்கு ஒரு மறைமுகமாக ஆபத்து விளைவிக்கக் கூடிய விதி இன்றைக்கும் இருந்து கொண்டிருக்கிறது.  இந்த விதியும் BSNLEU காலத்தில்தான் வந்தது.

கேடர் சீரமைப்பு:
         தோழர் குப்தா காலத்திலே அல்லது NFTE காலத்துல இருந்ததை - நம்பூதிரி இல்லை, இல்லை என்பதை சேர்த்துக் கொண்டே வந்தார்.  1979 லிருந்து தொடர்ந்து பெற்று வந்த போனஸ் இல்லை என்றாகி விட்டது.  அதே மாதிரி தொழில்நுட்ப மாற்றம் வந்து கொண்டிருக்கின்ற ஒரு இலாக்காவுல, பயிற்சி மறு பயிற்சி மூலம் கேடர்களை மேல்நிலைப் படுத்த வேண்டும் என்று சொல்லி கேடர் சீரமைப்பு என்ற முறையைக் கொண்டு வந்தோம்.
       1996 ல ஐந்தாவது சம்பளக் கமிஷனுக்கு பின்னாலும் கூட, கேடர் சீரமைப்பைக் கொண்டு வந்து, அதன் மூலமாக சம்பள உயர்வைக் கொடுத்து,  ஒரு சம்பளக் கமிஷன் இல்லாமலேயேக் கூட லட்சக் கணக்கான ஊழியர்களுக்கு சம்பள உயர்வைக் கொடுத்தோம்.
       ஆனால் இவர்கள், அந்தக் கேடர் சீரமைப்பு ஆட்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டம், அது கேடர் சீரழிவுத் திட்டம் என்றெல்லாம் கொச்சைப்படுத்தி, அதனை எதிர்த்தார்கள்.    அதையெல்லாம் தாண்டித்தான் இன்றைக்கு சம்பள முன்னேற்றம் வந்திருக்கிறது.  இதற்கு அடிப்படையான் காரணமே அந்த கேடர் சீரமைப்புத் திட்டம்தான். இதன் மூலம் எல்லோரையுமே மேல்நிலைப்படுத்துவது என்ற நிலையை உருவாக்கியிருக்கிறோம்.  RM ....TM, TTA என்றும், TO-TOA .....Sr.TOA, STS-SSS, CTS என்றும், TTA....JTO என்று போக முடிந்தது.

JCM:
     அதேபோலே நிர்வாகத்தோடு பேச்சு வார்த்தை நடத்துவதற்கான கருவியாக JCM உருவாக்கப்பட்டது.  மத்திய அரசு, தபால் தந்தி, DOT ஊழியர்களுக்கும் அது வந்தது.  அதே முறை  வேண்டுமென்று NFTE இல NATIONAL கவுன்சில்  ஒன்று  உருவாக்கினோம்.    ஆனால் இவர்கள் JCM என்பது அரசாங்கத்தோடு சேர்ந்து கூட்டு சதி செய்வதே என்று கிண்டலடித்தார்கள்.  ஆனால், இன்றைக்கு அதை ஏற்றுக் கொள்ளும் நிலைமைக்கு வந்திருக்கிறார்கள்.   அவர்களுடைய அடிப்படையே எல்லாவற்றையும் தவறாகப் புரிந்து கொள்வதுதான். ஊழியர்களுக்கு நலம் பயக்கும் எந்த திட்டமாயினும் எதிர்ப்பது என்ற வகையிலேதான் வளர்ந்திருக்கிறார்கள்.


பொதுத் துறை பயம்:
அதே போல பொதுத் துறையைக் காப்பது என்பது NFTE யினுடைய COMMITMENT.    ஆனால் BSNLEU வினுடைய முன்னோர்கள், தலைவர்கள் எல்லாம் பொதுத் துறையை வளர்ப்பது ஆபத்து, அது  முதலாளித்துவத்தை  வளர்க்கக்கூடிய  ஒரு  கருவி   என்று கருதினார்கள்.   ஆகவே பொதுத் துறையைக் கொண்டாட வேண்டாம் என்ற கருத்தோடு  இருப்பவர்கள் BSNLEU காரர்கள்.   அவர்களுக்கு இந்த COMMITTMENT இருப்பதற்கான வாய்ப்பு இல்லை.   அப்படியான கருத்து அவர்களுக்கு இல்லையானால் அவர்கள்  அதை இன்றைக்கு சொல்லவேண்டும்.  ஆகவே அவர்களுடைய கண்ணோட்டமே பொதுத் துறைபால் தவறான, ஊனமான் கண்ணோட்டமாக இருந்திருக்கிறது  என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.    

குரூப் இன்சூரன்ஸ்:

இன்னமும் பாத்தீங்கன்னா! இவர்களுடைய காலத்தில்தான் குரூப் இன்சூரன்ஸ் என்ற திட்டம் சிக்கலுக்குள்ளானது.   DOT இல இருந்த அந்தத் திட்டம்.   தபால் தந்தி ஊழியருக்கும்  இருந்தது.  அதே போன்ற திட்டம் BSNL ஆன பிறகு, நிர்வாகம் அதை நிறுத்துவேன் என்று சொன்ன  போது தோழர் குப்தா அதை போராடி இழுத்துக் கொண்டு வந்தார்.    இவுங்க அங்கீகாரத்துக்கு வந்த பின்னால் நிறுத்துவோம் என்று நிர்வாகம் சொன்னது. உடனே ஒத்துக்  கொண்டார்கள்.   
     அன்றைக்கு வெறும் 30 ரூபாய் செலுத்தக் கூடிய ஊழியர்களுக்கு 185 ரூபாய் அவர்களுடைய கணக்கில் போய்ச் சேர்ந்தது.   9 சதவீதம் வட்டி கொடுத்து வந்தார்கள்.   இந்தத் திட்டத்தை திடீரென்று நிறுத்தி ஊழியர்களுக்கான மூலதனத்தை பிரித்துக் கொடுத்ததன் காரணமாக, புதிய திட்டமாக 105 ரூபாய் திட்டத்தை கொண்டு வந்தார்கள்.  அதனால் ஊழியர்கள் 105 ரூபாய் போட்டால் கூட 70 ரூபாய்தான் அவர்கள் கணக்கில் வந்து சேர்ந்தது.  30 ரூபாய்  போட்டு  105 ரூபா  சேரக்   கூடிய  ஒரு  காலத்தில், அந்தத் திட்டத்தை நிறுத்திவிட்டு   105 ரூபாய்   போட்டு 70 ரூபாய் கிடைக்கக் கூடிய ஒரு திட்டத்தை இவர்கள் சேர்த்தார்கள்.   ஆகவே எவ்வளவு பெரிய நஷ்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

கையாலாகாத்தனம்:
     குப்தா DOT யிலேருந்து எல்லாவற்றையும் இங்கே கொண்டு வந்து சேர்த்தார்.  இவர்கள் DOT யிலேருந்து வந்ததை BSNL நிறுத்துவேன் என்று சொன்னபோது உடன்பட்டார்கள்.
ஆனா,  குப்தா DOT க்கும் BSNL க்கும் ஒரு COMMITMENT ஐ இணைத்துக் கொண்டே வந்தார்.   அந்த இணைப்பை BSNL வெட்ட வரும்போது இவர்கள் உறுதுணையாக இருந்தார்கள்.   இப்போது BSNL சில விஷயங்களை வெட்ட விரும்புகிறது.   அதற்கும் உடன்பட்டார்கள். 

CDA விதி:
இப்பொழுது BSNL நினைக்கிறது.  55 வயதுள்ள ஒரு ஊழியரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற CDA விதியே இவர்கள் காலத்தில்தான் உருவாக்கப்பட்டது. CONDUCT DICIPLINE APPEAL என்ற ரூல் 2006 லே இவர்கள் பொறுப்பில் இருந்த காலத்தில் நம்மீது திணிக்கப்படுகிறது.  எதிர்ப்பை பதிவு செய்யவில்லை BSNLEU.   ஒரு DE, AGM   நினைத்தால் கூட 55  வயதுள்ள ஒரு ஊழியரை எந்த காரணமும் சொல்லாமல் வெளியேற்றலாம் .   ஒரு காலத்தில் CCM , GM, CHAIRMAN நினைத்தால் கூட எவரையும் வெளியேற்ற முடியாது என்ற நிலை இருந்தது.   சமீபத்தில   இன்னும் மோசமான ஷரத்து ஒன்னு வந்திருக்குது. 61 1 4 என்று சொல்வார்கள்.  அதன் படி நம்மோட CMD நினைத்தாலே, நம்மோட DOT காலத்து பென்சனை நிறுத்திப்புடலாம்.  இதை பற்றியும் எந்தவிதமான ஞானமும் இல்லாமல், இது மாதிரி வந்திருக்கிறது என்ற தகவலைக் கூடச் சொல்லாமல் BSNLEU ஓடிக்கொண்டிருக்கிறது.   NFTE போராடிக் கொண்டிருக்கிறது.   DOT காலத்துல வாங்கின பென்சனை எவனும் கை வைக்க முடியாது என்ற உத்தரவை தோழர் குப்தா வாங்கிக் கொடுத்தார்.  
      ஆனால் CDA விதிகள்ள DOT காலத்துப் பென்சனை அரசாங்கமே கை வைக்க முடியாது -  DOT  யே கை வைக்க முடியாது   என்ற ஒன்றை ஒரு சாதாரண CMD நினைத்தால் கூட வெட்டி விடலாம் என்ற நிலைமை வந்துள்ளது. .   நமது காலத்தில், NFTE காலத்தில் எதெல்லாம் கஷ்டப்பட்டு, பெரும் சாதனையாகப் பெற்றோமோ அதெல்லாம்   தானடித்த மூப்பாக செய்யப்பட்டு  வருகிறது.     இன்றைக்கு ஒரு லட்சம்  பேரை  வீட்டுக்கு அனுப்பலாம் என்ற பரிந்துரை வந்திருக்கிறதே.  யார் காலத்தில்? அதுவும் BSNLEU காலத்திலேதான் வந்திருக்கிறது.    அதே போல 30 % பங்குகளை விற்போம் என்றும்  சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். 

பரிவு அடிப்படைப் பணி:
     BSNLEU வினுடைய இந்த ஆறாண்டு அங்கீகார காலத்தில் நடந்த பல்வேறு விஷயங்களை நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.  ஊழியர்கள் தம்முடைய பணிக் காலத்தில் இறந்து போனால், அவர்களுடைய குடும்பத்திலே ஒருவருக்கு வேலை என்பது DOT காலத்திலேயிருந்து,  நாம் உடனுக்குடன் பெற்று வந்தோம்.   இப்போது அது  கிடைக்கக் கூடாது  என்ற வகையில்  வரையறைகள்  வந்துள்ளது .  அந்த குடும்பத்துடைய வறுமை 55 % இருக்கிறதா என்று பார்க்கப்படுகிறது.   வறுமை நிலை நிர்ணயிக்கப்பட்டு அவர்களுக்கு வேலை தரப்படுகிறது.   ஒரு காலத்திலேயே  DE,  DGM, JTO என்ற அளவிலே கூட பரிவு அடிப்படை வேலை கொடுக்கப்பட்டது.  குடும்பத்தில் யாருக்கு வேண்டுமானாலும் வேலை கொடுக்கலாம் என்ற நிலை இருந்து வந்தது.  இவர்கள் காலத்தில் எல்லா கணக்கும் பார்க்கப்பட்டு குடும்பத்திலுள்ள பெண்களுக்கு மட்டும் இப்போது வேலை கொடுக்கப்பட்டு வருகிறது.   ஆக, இன்றைக்கு குரூப் D வேலை கூட பரிவு அடிப்படையில் கிடைக்கக் கூடாது என்ற நிலை வந்து விட்டது.    மிகக் கடுமையான மதிப்பீடு, அதாவது புள்ளி முறை என்பது வேலை கிடைக்கக் கூடாது  என்கின்ற நிலைமைக்கு கொண்டு வந்துள்ளது.  நமது NFTE  இந்த 55 சதவீதத்தை எப்படியாவது குறைக்க வேண்டும் என்று போராடி வருகிறது.    இதற்கு மறைந்த தலைவர் விசாரே அவர்கள் குறிப்புகள் கொடுத்திருக்கிறார்கள், தமிழகத்தில் நாம் கூட குறிப்பு கொடுத்திருக்கிறோம்.   இந்தப் புள்ளிகளை 35 என்ற அளவிலாவது குறைத்தால்தான் இன்னும் சில குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.    அதோடு, NFTE -ல் LUMP SUM என்கின்ற அளவிலே மொத்தமாக கொடுக்க வேண்டும் என்றும் OPTION வைத்துள்ளோம்.      ஆனால் BSNLEU இதிலே எந்தவித பொறுப்புமில்லாமல்,  55 % புள்ளியை குறைக்க வேண்டி NATIONAL JCM  மிலே வலியுறுத்த வேண்டும் என்ற சிந்தனை கூட இல்லாமல் இருந்து வருகிறது.    

தொடரும் .....
தொகுப்பு: S . சிவசிதம்பரம்.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR