தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, January 19, 2011

நண்பனும் வம்பனும்!


Part 3:
நண்பன்: 
வணக்கம் தோழரே!  EU வோட தேர்தல் சிறப்பிதழ் பார்த்தீங்களா!  ரொம்ப கலர்புல்லா அசத்தியிருக்கிறாங்க .

வம்பன்:
பாத்தேன் தோழரே! நல்ல கவர்ச்சிகரமா இருக்கு.   ஜனங்கள மடையனா நினைச்சு நறையா   எழுதியிருக்காங்க.  EU காரனே குழம்பிப் போற அளவுக்கு எழுதியிருக்காங்கன்னா   நீங்க பாத்துக்க வேண்டியதுதான்!

நண்பன்:  
ஒங்க பாணி பதில்தான் ரொம்ப வெவரமா இருக்குன்னு சொல்றாங்க!  ஒன்னு ஒண்ணா சொல்லுங்களேன்!   

வம்பன்:  
நீங்களும் ஒரு வருஷம் EU வுக்கு  போயிட்டு வாங்களேன்!  என்ன விட பிரமாதமா பின்னிடுவீங்க தெரியுமா?   என்னா ஒன்னு, வெவரம் தெரிஞ்சவங்க, கேள்வி கேக்குறவங்க அங்க ஒரு நாள் கூட இருக்க முடியாது.

நண்பன்:
தோழரே!  நீங்க ரொம்பதான்  நொந்திருக்கீங்கன்னு தெரியுது.  சரி.  விஷயத்துக்கு வாங்க!

வம்பன்:  
ஸ்பெக்ட்ரம் ஊழல் பத்தி வாயே தொறக்காத EU   இப்ப 1,76,000 கோடி  ஊழல்  பத்தி  எழுதுனவொன்ன, நான் ஆச்சரியப்பட்டு படிச்சா அந்த பக்கத்துல ஒரு எடத்துல கூட ராசாவோட பேர் வரலங்க.   எப்படி கூட்டணி தர்மத்தை காப்பாத்துறாங்க பாத்தீங்களா!  
     அப்புறம் பாத்தீங்கன்னா! சாதனைப் பட்டியல்!   பங்கு விற்பனையை தடுத்து, VRS ஐ தடுத்து, ஊதிய உயர்வைக் கொடுத்து, பதவி உயர்வைத் தந்து, போனசிலே போராடி அது இதுன்னு எழுதி தள்ளியிருக்காரு. 
     தேர்தல் வாக்குறுதியில பாத்தீங்கன்னா, அதே சாதனைப் பட்டியல் செய்திதான்.  எப்படி இவங்களால மட்டும்   இப்படியெல்லாம் எழுத முடியுதுன்னு எனக்கு ஓரே  ஆச்சரியம்!  .
நாம எதிர்பாக்குற  எந்த விளக்கமும் அவங்களால கொடுக்க முடியாம  தடுமார்றாங்க, தெரியுமா!

நண்பன்: 
நாம எதிர்பாக்குற வெளக்கம் என்னான்னு மறுபடியும் கொஞ்சம் சொல்லுங்களேன்!

வம்பன்:
ரொம்ப அவுங்களைப் போட்டுக் காய்ச்சாம நறுக்குன்னு நாலு கேள்வி மட்டும் கேக்கறேன் நண்பரே!   
     1. பரிச்சை இல்லாம பதவி உயர்வுன்னு முதல் தேர்தல்ல சொன்னாங்களே! அது தொடருதா! இல்லையா!  இல்ல அத கோரிக்கை லிஸ்ட்ல இருந்து எடுத்துட்டாங்களா!
      2.   போனசுக்காக டிசம்பர்  1, 2 ல எல்லாரும் சேந்து JAC சார்பா வேலை நிறுத்தம் செஞ்சோமே!  அத ஏன் வாபஸ் வாங்கினாங்க?  CMD வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்குங்க! லாபம் வந்த ஒடனே ஒங்களுக்கு போனஸ் தர்றேன் அப்படீன்னதால வாபஸ் வாங்கினேன்னு அபிமன்யு சொல்றாரே! அவருக்கு, எப்பவுமே  நிர்வாகம் இது மாதிரித்தான்  வேண்டுகோள் வைக்கும் என்று வேலை நிறுத்தம் அறிவிக்கும்போதே தெரியாதா!  
     3.  இந்த இரண்டு நாள் போராட்டத்தில் தோழர் அபிமன்யு ஏன் கலந்து கொள்ளவில்லை?   அவருக்கு சம்பள வெட்டு வராமல் பார்த்துக்கொள்ளவ!!
     4.  சரி, அப்படித்தான் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதே, அதே கோரிக்கையை வைத்து மீண்டும் ஜனவரியில் ஆர்ப்பாட்டம் வைத்தாரே! அது எதற்க்காக? வேலை நிறுத்தத்தை விட ஆர்ப்பாட்டம் வெற்றியை அளித்து விடுமா? 
     5. 1.1.2007 அன்று வரவேண்டிய சம்பளக் கமிச்னுக்கு 2006   லேயே குறிப்பு கொடுக்க வேண்டிய நம்பூதிரி 2009 வரை ஏன் கொடுக்கவில்லை? ஊழியர்களுக்கு கிடைக்கக் கூடாது என்றா!  எலெக்சன் வரைக்கும் தள்ளிப் போட வேண்டும் என்பதற்க்காகவா!   அல்லது குறிப்பு கொடுக்க தெரியாததாலா!   அப்படி தாமதமாக 40 மாதம் கழித்து அறிவித்த வேளையில், 78.2 % IDA இணைப்பு  பொதுத் துறைக்கு உண்டு என்று நீதி மன்றத்தால் அறிவிக்கப்பட்ட வேளையில் அதைக் கோரிப் பெறாதது எதனால்?
     6. 4 கட்ட பதவி உயர்வு என்பது நம்பூதிரி கேட்ட ஒன்று அல்ல.  அது அதிகாரிகளுக்கு கொடுக்கும் போது அதே மாதிரி பெறப்பட வேண்டிய ஒன்று.  சரிதானே!  ஒரு பதிவு செய்யப்பட அதிகாரிகள் சங்கம் 4-4-4-4  என்று பெரும் போது, அங்கீகாரம் பெற்ற சங்கம் அதை ஏன் 4-7-7-8 என்று பெற வேண்டும்?
   போதுமா தோழரே!

நண்பன்:
போதும் தோழரே! போதும்!  சொல்லச் சொல்ல எவ்வளவு இழப்புகள் EU வின் கையாலாகாத்தனத்தினால் ஏற்பட்டிருக்கிறது  என்பதை என்னும்போது ரொம்ப வேதனையா இருக்கு!  இதற்கு பதில் சொல்கிறார்களா பார்ப்போம்!
வம்பன்: 
     பதில் சொல்லவே மாட்டாங்க!!   அவுங்களைப்  பத்தி எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும்!

     நேர்மையான சங்கம்னா பதில் சொல்லியே தீரும்.  EU  தோழர்கள் அவுங்களோட தலைமையை கட்டாயப் படுத்தி பதில் வாங்கினாத்தான் உண்டு.  நாம போய் கட்டாயப் படுத்த முடியுமா!  
தொடரும்...........
பேட்டி தொகுப்பு
உங்கள் சீனாதானா

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR