தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Sunday, April 1, 2012

ஒரு தும்பைப் பூ துவண்டது!

     புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தோழர் S.P. முத்துக்குமரன் அவர்கள் இன்று காலை அகால மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தோம்.   44 வயதைக் கடக்காத தோழர். சென்ற சட்ட மன்றக் கூட்டத் தொடரில்  பயனுறு கேள்விகளை அதிகம் கேட்டவர் என்ற பெயர் எடுத்தவர். சட்டமன்றத்தில் கேள்வி கேட்போர் இவரது அணுகுமுறையைக் கடைபிடிக்க வேண்டும் என்று சபாநாயகரால் பாராட்டப் பெற்றவர்.  இவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. 
     அரசியல் சாக்கடையில்  பூத்த தும்பைப் பூ என்று ஜூனியர் விகடனால் தேர்தல் காலத்தில் பாராட்டப் பெற்றவர். 
     இவரது இழப்பால் துயருறும் அவர்தம் குடும்பத்தாருக்கும், இயக்கத் தோழர்களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், தோழர் முத்துக்குமரனுக்கு வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். 
தோழமையுடன்,
தஞ்சை மாவட்டச் சங்கம்.      

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR