தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Monday, April 16, 2012

தஞ்சை SDO போன்ஸ் கிளை மாநாடு.

     கடந்த ஏப்ரல் 7 ம் தேதி தஞ்சை CTO காம்பௌண்டில் SDO போன்ஸ் கிளை மாநாடு தோழர் மேகநாதன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. கடந்த ஆண்டு தலைவர், செயலர், பொருளராக முறையே தோழர்கள் ரெத்தினசாமி, ராஜ்மோகன், நீலமேகம் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு ஆண்டு விழாவினை விமரிசையாக நடத்தினார்கள். விழாவைச் சிறப்பிக்க மாநிலத் தலைவர் தோழர். S. தமிழ்மணி அவர்களும், மாநிலச் செயலர் தோழர் பட்டாபி அவர்களும் வருகை தந்திருந்தனர்.  

     புதிய தலைவர், செயலர், பொருளராக தோழர்கள் R . குணசேகரன், ஜோதிவேல், கே.செல்வராஜ் ஆகியோர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

     தலைவர் தமிழ்மணி அவர்கள் நடப்பு அரசியல் நிலவரம், பட்ஜெட் போன்றவற்றில் உள்ள சாதக, பாதகங்களை விளக்கிப் பேசினார். 

     மாநிலச் செயலர் தமது உரையில் பல்வேறு செய்திகளை விளக்கமாக எடுத்துரைத்தார்.

     நாம் நகர்ப்புறத்தில் 160 % தொலைபேசி இணைப்பையும், கிராமப்புறத்தில் 35 % தொலைபேசி இணைப்பையும் பெற்றிருக்கிறோம்.   நமது துறைக்கு தற்போது வருவாயில் சரிவும், லாபத்தில் சரிவும் ஏற்பட்டிருக்கிறது.
      இதைச் சரி செய்வதற்கான ஆலோசனையைத் தருவதற்கு சாம் பிட்ரோடா தலைமையில் குழு அமைக்கப்பட்டது.  பிப். 2010 ல் பிட்ரோடா கமிட்டி தமது பரிந்துரையைத் தந்தது.  
 பிட்ரோடா அறிக்கை கூறியது என்னவென்றால்:
   -  1 லட்சம் ஊழியர்களைக் குறைக்க வேண்டும்.
   - ITS அதிகாரிகளை மறு சீரமைக்க  வேண்டும். 
   - 30 % பங்கை விற்க வேண்டும். இதில் வரும் தொகையில் 10 % த்தை அரசுக்கும், மீதம் 20 % த்தை VRS ஆல் ஆகும் செலவுக்கும்  பயன்படுத்த வேண்டும்.  
     - நாடு பூராவும் நமது அலுவலக எல்லைகளில் உள்ள உபரி நிலங்களை, கட்டிடங்களை விற்பது அல்லது வாடகைக்கு விடுவது போன்ற காரியங்களில் ஈடுபட வேண்டும். 
     சென்னையில் தற்போது 240 கோடியில் CGM அலுவலகம் 7 மாடிக் கட்டிடமாக  கட்டப்படவிருக்கிறது.   இதில் ஒரு பகுதியை 7 கோடி வருட வாடகையில் அப்போல்லோ மருத்துவமனைக்கு கொடுக்கவிருப்பது பிட்ரோடா பரிந்துரையின் அடிப்படையில்தான்.     இந்த BRPSE பரிந்துரையின் மீது CMD சில தகவல்களைக் கொடுத்தார். அந்த BSNL CORE COMMITTEE யில் CMD அவர்கள்  கூறும்போது : 
     BSNL -ல் வருவாய் வீழ்ந்ததற்கு ஊழியர்கள் காரணமல்ல. 
     ஊழியர்க்கான செலவே காரணம் என்றும் கூறியிருக்கிறார். மேலும்,
     99000 பேருக்கு VRS கொடுக்கலாம். 
     அதில் திருப்தியான சேவை தராத நபரை வெளியேற்றலாம்.   
     இந்த வெளியேற்றத்தில் 58 % TM . அதாவது 46000 ஊழியர்கள். 
     52 % Sr.TOA .   அதாவது 27000 ஊழியர்கள்.    
     அதோடு STAFF REDEPLOYMENT -ம் செய்து கொள்ளலாம்.  

முன்பு DOT யில் 100 ரூபாய் வருவாய்க்கு 29 ரூபாய் செலவானது. 
இப்போது BSNL -ல் 100 ரூபாய் வருவாய்க்கு 130 ரூபாய் செலவாகிறது. 
பிராட் பேண்ட் இணைப்புகள் 24 மணி நேரமும் தரும் வகையில் OUTSOURCING ல் ஒரு இணைப்புக்கு ரூபாய் 100 என்ற விகிதத்தில் விடப்பட விருக்கிறது. 
     1லட்சம் கோடி ரூபாய் டெலிகாம் துறை விரிவாக்கத்திற்கு  கடனாக வழங்கப்பட்டுள்ளது.   இதில் ரெலையன்ஸ் மட்டுமே 3 G -க்காக ரூபாய் 12000 கோடி கடன் பெற்று அதை மிகக் குறைந்த வட்டியில் ஆண்டுக்கு 500 கோடி என்ற அளவில் திரும்பச் செலுத்தி வருகிறது. 
ஆனால் நாம் இருப்பில் இருந்த தொகையில் 18000 கோடியை எடுத்து கட்டிவிட்டு கையிருப்பை கரைத்திருக்கிறோம். வங்கியில் ஒரு பைசா கூட கடன் பெறாமல் தொழில் நடத்தும் ஒரே நிறுவனம் BSNL மட்டும்தான். மற்ற தனியார் துறை நிறுவனங்கள் எல்லாம் வங்கியில் கடன் பெற்று தொழில் நடத்துகின்றான்.
நமது சங்கம் பல சாதனைகளை செய்து இருக்கிறது. 
     20 ஆண்டு சேவைக்குப் பிறகே பென்சன் என்பதை மாற்றி 10 ஆண்டு முடித்தாலே பென்சன் என்றாக்கியிருக்கிறோம். 
     MRS க்கான தொகையை புதிய சம்பள விகிதத்தில் மாற்றி பெற்றுத் தந்திருக்கிறோம்.   ( தற்போது அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது ).
       TSM தோழர்களுக்கும் பென்சன் உண்டு என்று வாங்கியிருக்கிறோம்.

     CMD நியமனத்தில் NFTE சம்மேளனத்தின் நிலைபாடுதான் இறுதி முடிவானது.

     VRS ல் சில முடிவுகளை எடுத்திருக்கிறார்கள். அதை  அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து சந்திக்க வேண்டும். 
       எக்காரணத்தைக் கொண்டும் BSNL அழிந்து  விடும் என்று எண்ணத் தேவையில்லை.   
     

     இறுதியாக, நான் மாவட்டச் செயலராக இருந்த போது,  பல சாதனைகளை, வெற்றிகளை குவிக்க இந்தக் கிளை பெரும் ஒத்துழைப்பை தந்தது.   அது என் நினைவில் இன்றும் பசுமையாக இருக்கிறது. 
    எதிர்வரும் காலங்களில் நாம் பல்வேறு வகையான சவால்களைச் சந்திக்கவிருக்கிறோம். அந்தச் சவால்களைச் சந்திக்க நமது தலைமை விடுக்கும் எல்லா வித போராட்டங்களுக்கும் எத்தகைய சலனங்களுக்கும் ஆட்படாது நீங்கள் 100 % பங்களிப்பை தரவேண்டும் என்று நெகிழ்ச்சியோடு வேண்டுகோள் விடுத்து தமது உரையை நிறைவு செய்தார்.  

தொகுப்பு:
எஸ். சிவசிதம்பரம்.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR