தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Tuesday, April 30, 2013




 தியாகத்தை நினைவில் கொள்வோம்!

         சுழலும் உலகின் அச்சாணியாய் திகழும் உழைப்பாளர்களின் உரிமை நாள் மே தினம். நவீன காலம் தொழிற்கருவிகள் கண்டுபிடிப்போடு மட்டும் தொடங்கவில்லை. ஓய்வு ஒழிச்சல் அற்றுபலமணிநேரம் அந்த தொழிற்கருவிகளுக்கு இணையாய் சுழன்று உழைத்த உழைப்பாளர்களோடும் தான் தொடங்கியது. இருபது மணி நேரத்திற்கும் மேலாக ஆலைகளில் நசுங்கிய உழைப்பாளர்கள் எட்டுமணிநேரவேலை என்ற உரிமைக்காக போராடினார்கள். 1886 ம் ஆண்டு மே 1ஆம் நாள் எட்டுமணி நேர வேலைக்காக அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு அறிவித்த நாடுதழுவிய வேலை நிறுத்த போராட்டமே மே நாள் என்ற உழைப்பாளர் உரிமை தினத்தின் தொடக்கம். அந்த உரிமைப்போரில் துப்பாக்கிக் குண்டுக்கு பலியாகியும், தூக்குமேடை ஏறியும் உயிர்தந்த ஈகியரை இந்த நாளில் நினைவில் ஏந்துவோம். அந்த உரிமை தினத்தை ஆங்கில ஆட்சியின் அடக்குமுறைக்கு முறைக்கு அஞ்சாமல், 1923ஆம் ஆண்டு சென்னை கடற்கரையில் செங்கொடி ஏற்றி இந்த துணைக் கண்டத்திற்கே அறிமுகம் செய்து வைத்தவர் எங்கள் பாட்டன் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர். நவீன காலத்தின் தொடக்கத்தில் உலகெங்கும் உழைப்பாளர்களும்அவர்களின் உரிமைப்போரும் தோன்றிய காலத்தில்தான், தமிழினமும் நாடுதோறும் கூலிகளாய் சென்றது. தமிழர்கள் உலகிற்கு உழைப்பையும், அதன் வழி கூலி என்ற சொல்லையும் உலக மொழிகளுக்கெல்லாம் தந்து, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற எம் முப்பாட்டனின் பொதுமைக்கு உயிர்கொடுத்தான். தொழிலாளர்களின் உரிமைப் போராட்டத்தில் உலகமுதலாளிகள் கற்றுக் கொண்ட பாடம். இன ஒடுக்குமுறை. அதனால்தான் உலகத்தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்று முழங்கிய மாமேதை லெனின், ஒடுக்கும் இனத்தின் தொழிலாளர்கள் ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலைக்கு போராடவேண்டும் என்றார். எம் தமிழினத்திற்கு வந்த சாபக்கேடோ என்னவோ  30 கடல் மைல் தொலைவில் எம் உறவுகள் இன ஒடுக்கு முறையால் மண்ணின் மைந்தர்கள் என்ற உரிமையை மட்டுமல்ல உழைப்பாளர்கள் என்ற தகுதியையும் இழந்து பிச்சைக்காரர்களாய் கையேந்தி நிற்கிற கொடுமை. தாய்த்தமிழகத்திலோ தொழில் வாய்ப்புகள் அனைத்தும் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. இருபது ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த ஏராளமான தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டு, தமிழர்களை அத்தக் கூலிகளாக மட்டுமே ஏற்கும் பன்னாட்டு தொழிற்சாலைகள் பெருகியுள்ளன. பெரும்பாலான தொழிலாளர்கள் தொழிற்சங்க உரிமையற்ற உதிரிகளாய் மாற்றப்பட்டிருக்கின்றனர். கொஞ்சநஞ்சம் உள்ள ஆலைகளிலும், 12 மணி நேரத்திற்கும் மேல் உழைத்தால் தான் வயிற்றைக் கழுவ முடியும் என்ற நிலை. உழவுத்தொழில் தன் இறுதிக்காலத்தில் துடித்துக் கொண்டிருக்கிறது, உழவுக்கு அடுத்த நிலையில் இருந்த நெசவுத்தொழில் அழிந்து விட்டது. பட்டினிச் சாவுகளும், குடும்பமாய் தற்கொலை செய்து கொள்வதும் தமிழர்களின் தலைவிதியாகிக் கொண்டு வருகிறது. இந்த நிலையிலிருந்து மீள்வதற்கும், இன அழிப்பு உள்ளிட்ட அனைத்து ஒடுக்குமுறையிலிருந்தும் விடுபட்டு உழைப்பாளர்கள் உரிமைக்காய் ஒன்று சேர்வதற்கும், மேதின ஈகிகளின் நினைவைத் தாங்கி தொடர்ந்து உழைப்போம்.

Sunday, April 28, 2013

தொழில் செய்வது 
தொழிற்சங்கத்துக்கு அழகல்ல!
K. நடராஜன், மாநில துணைச் செயலர்.

         தோழர் ராமகிருஷ்ணனுக்கு ரியல் எஸ்டேட் பிசினஸ், எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்ச் நடத்துவது போன்ற தொழில் சார்ந்த கடமைகள் ஏராளமாய் இருக்கையில் அதற்கு இடை இடையேதான் தொழிற்சங்க கடமையாற்ற முடிகிறது.  அப்படிப்பட்ட நேரத்திலும் கலவரம் வெடித்துவிடும், தமிழகம் புகைந்து விடும் என நஞ்சைக் கக்குகிறார்.   
              மாநிலச் செயலருக்கு அறிவுரை கூறும் அளவுக்கு இவருக்கு, அனுபவம் கிடையாது  என்பதே நமக்கு இவரிடம் கிடைத்த அனுபவம்.   
              கடலூர் தோழர்கள், அங்கு என்ன நடந்தது என்பதையும், அதை எப்படி சரி செய்து கொள்ள வேண்டும் என்பதையும் நன்கு அறிந்த அனுபவசாலிகள்.     அவர்கள் பிரச்னையை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள்.  
              வெளியிலிருந்து ஆதரவு, உள்ளிருந்து உள்குத்து போன்றவைகள் அங்குத் தேவையில்லை.
               தோழர். ராமகிருஷ்ணன், தன மாவட்டத்தைப் பற்றியும், தன் சொந்தத் தொழிலைப் பற்றியும் நன்கு கவனம் செலுத்தட்டும்.   நன்றி! 
அடி தடி நமது கலாச்சாரமல்ல!  
அடி தடிக்கு அஞ்சியதும் நமது மரபல்ல!! 

இன்று கடலூரில் விரும்பத்தகாத நிகழ்வை 
நிகழ்த்திய தோழர்கள் மீண்டும் சரிவை நோக்கிச் செல்கிறார்கள் 
என்றே கருதுகிறோம்.  

உடனே இதை தலைகுனிவு என்றெல்லாம் சொல்ல முடியுமா!
ஜெகனுக்கு ஏற்பட்ட சோதனைகளை  எல்லாம் கண்ணால்   
பார்த்தவர்கள்தானே நாம்.  

நமது தேர்தல் முடிந்து 10 நாள்கூட ஆகவில்லை. 
அதற்குள்ளே அங்கு நடக்கும் கூட்டுறவு பண்டகசாலை தேர்தலில் நமது தோழர்களே எதிரணியோடு கூட்டு சேர்வது என்பது NFTE  க்கு அவமானத்தை தரும் என்பதை உணர வேண்டாமா! 

இது தமிழக NFTE க்கு பெருத்த அவமானத்தை எல்லாம் தராது.   
சொந்த சங்கத்திற்கே ஓட்டுப் போடாத போதும்,  வாக்கு சேகரித்தவர்களே வாக்களிக்காத போதும் வெற்றி கண்ட தமிழகத்திற்கு பெருத்த அவமானம் என்பதெல்லாம் வெட்டிப்பேச்சு. 

எதையும் கையாளும் திறமை 
நமது மாநிலச் செயலருக்கு உண்டு.
கையை உயர்த்திப் பேசினால் கூட எனது தோழன் முகம் கன்றிப் போய்விடுவானோ  என்று எண்ணி கையைத் தாழ்த்திப்  பேசும் நமது தலைவர்  இதனையும் திறமாகக் கையாளுவார். 

ஒரு மாவட்டச் செயலர், 
தான் எழுதிய நோட்டீசை அவருடைய எல்லைக்குள்ளே உள்ள 
தகவல் பலகையில் ஓட்டுவதற்கு உரிமையில்லையா?    
சரி! அப்படியே இல்லையென்றாலும் 
அதற்கு  எதிர்ப்பை இப்படியா காட்டுவது?  
மாவட்டச் செயலருக்கு எதிரிலேயே கிழிப்பது, கை நீட்டுவது என்பதெல்லாம் ஒரு கிளைச் செயலருக்கு அழகல்லவே!
எமது மாவட்டத் தோழர்கள் இப்படி ஒரு நிகழ்வை 
எண்ணிப் பார்க்கவே கூசுவார்கள். 

இந்த மாதிரி சம்பவத்தை முன்மாதிரியாக 
கொண்டு எவரேனும் நடப்பாரேயானால் 
விளைவுகள் மோசமாகப் போகும் என்று எச்சரிக்க விரும்புகிறோம்.

இதை மாநிலச் செயலர் உணர வேண்டும்
 என்பது அவசியமில்லை.  
மாவட்டச் செயலர்கள் உணர்ந்தாலே போதும்.

எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 
                  மெய்ப்பொருள் காண்பதறிவு.

அன்புடன், 
எஸ் சிவசிதம்பரம், 
பட்டுக்கோட்டை. 

Sunday, April 21, 2013

 நன்றி தோழர்களே !

தேர்தல் பணிகள், பிரசாரங்கள் கடந்த 2 மாதங்களாக 
சித்திரைத் திருவிழா போல்  சிறப்பாக நடந்தேறியிருக்கிறது.
கடினமான உழைப்பினை, நிறைய நிதியினை 
பல தலைவர்களும், தோழர்களும் தந்திருக்கிறார்கள்.
தனது வீட்டு நிகழ்ச்சியை எல்லோரும் பாராட்டும்  விதத்தில் 
நடத்தி முடிக்க  எப்படிஎல்லாம்  கண்ணும் கருத்துமாக 
உழைப்பார்களோ அதைப் போன்றும் உழைத்திருக்கிறார்கள்.   
இவர்களுக்கெல்லாம் ஒற்றை வரியில் நன்றி 
என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை.

தேர்தல் காலத்தில் நாம் அளித்த வாக்குறுதிகளை 
முழுமையாக நிறைவேற்ற 
கடுமையாக பாடுபடுவோம், போராடுவோம் 
என்பதுதான் உழைத்தவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றி! 

அகில இந்திய அளவில் 
BSNLEU  99,380 ( 48.6 % )
வாக்குகள்  பெற்றிருக்கிறது.
நமது  ( NFTE - BSNL ) 61,915 ( 30.28 % )
வாக்குகள் பெற்றிருக்கிறது.
FNTO 14,088 ( 6.89 ) வாக்குகள் பெற்றிருக்கிறது.
 
தமிழகத்தில் 
 NFTE - BSNL  6922 வாக்குகள் பெற்றிருக்கிறது.
BSNLEU  6178 வாக்குகள் பெற்றிருக்கிறது.
FNTO  1217 வாக்குகளைப் பெற்றிருக்கிறது. 

புதிய அங்கீகார விதிகளின்படி 
51 %  வாக்குகளைப் பெற்ற
 முதன்மைச் சங்கம் என்று எதுவும் வரவில்லை.
சம உரிமையுள்ள 
நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட 
தகுதியுள்ள சங்கமாக 
BSNLEU  -  NFTE  சங்கங்கள் 
வாய்ப்பைப் பெற்றிருக்கிறது.
7 % க்கு குறைவாக வாக்குகள் பெற்ற FNTO  வுக்கு 
அந்த வாய்ப்பு  கிட்டவில்லை.

அகில இந்திய, மாநில, மாவட்ட மட்டங்களில் 
அமைக்கப்படும் JCM ல் 
BSNLEU - NFTE க்கு முறையே 
9 : 5 என்ற விகிதத்தில்
 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

வெற்றி பெற்ற அனைவருமே புத்திசாலியில்லை!
புத்தியுள்ள அனைவருமே வெற்றிபெற்றதில்லை! 
என்ற பாடல் வரிகளும், 
என்னை  இன்னுமா நம்புறாங்க என்ற நகைச்சுவை வரிகளும் 
நினைவுக்கு வந்தாலும் அவையெல்லாம்
 இனி கவைக்குதவாது என்பதை உணர்வோம். 

தேர்தல் கால சாடல்கள், பேச்சுக்கள், விமர்சனங்கள் 
தேர்தலோடு போகட்டும்.   இனி தொடர வேண்டாம். 
பேசினால் பேசலாம், தாக்கினால் தாக்கலாம்.   
ஆனால், பேசவோ, தாக்கவோ தூண்ட வேண்டாம். சங்கத்தில் ஒற்றுமை, சங்கங்களுக்குள் ஒற்றுமை 
என்பதே இன்றைய தேவை 
என்பதை உணர்ந்து செயல்படுவோம்!

   
இரு வேறு கருத்துக்கள் இருந்த போதும்  
ஏதாவது ஒரு புள்ளியில் சந்திக்க முயல வேண்டும். 
NEPP, போனஸ், 78.2 போன்ற இன்னும் பல கோரிக்கைகளில் முன்னேற்றம் காண நிச்சயம் மாற்றுக் கருத்துக்கள் 
இரு சங்கத்துக்கும் உண்டு. 
அவைகள்  JCM  க்கு வெளியில் பேசி, விவாதித்து 
ஒத்த கருத்தோடு சென்று நிர்வாகத்தை சந்தித்தால் 
வரப்போகும் மூன்றாண்டும்  முன்னேற்றமாண்டாகும் !

நன்றி தோழர்களே!

அன்புடன், 
எஸ்.  சிவசிதம்பரம்.
பட்டுக்கோட்டை.






Thursday, April 18, 2013

தமிழ் மாநில ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் 
தஞ்சை மாவட்டம்.


     நமது மாவட்டத்தில் கேபிள் பணியாற்றுகின்ற தோழர்களுக்கு சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து காப்பாற்று முகமாக தொப்பி வழங்கப்படவிருக்கிறது.    ஒப்பந்ததாரரிடம் பேசி ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. வருகின்ற வெள்ளியன்று அனைவருக்கும் வழங்கப்படவிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

வாழ்த்துக்களுடன்,
K. கிள்ளிவளவன்,  மாவட்டச்செயலர்.

K. கலைச்செல்வன்,மாவட்டத் தலைவர்.

S. சிவசிதம்பரம், மாவட்டப் பொருளர். 


6 ஆவது சங்க அங்கீகாரத் தேர்தல் 
தேர்தல் முடிவுகள் 

- : Tamil Nadu Circle : -

SSANFTEBSNLEUFNTOOthers
Cuddalore52828355
Salem69658467
Thirunelveli36531430
Trichy741454249
Vellore77231062
Thanjavur57211625
Kumbakonam3789664
Karaikudi27477123
CGM(O),Chennai.22519496
Pondycherry1541642813
Nilgiris(Coonoor)471765
Tuticorin18322445
Nagercoil11628032
Dharmapuri7030920
Virudhunagar2342561514
Erode39252126
Madurai585797199
Coimbatore586102269
Tamil Nadu Circle691861771210


- : All India : -


Name- CIRCLEVote- BSNLEUVote- NFTE
A & N11049
Assam3082400
ALTTC Ghaziabad7435
Bihar15442306
BRBRAITT760
Corporate Office9370
Himachal Pradesh Circle14711001



Haryana Circle18931697
Chhatisgarh616887
Gujarat68654937
Jharkhand6271310
Karnataka80025316
Kolkata KTD42381156
Madhya Pradesh39772703
Maharastra103946053
NE-I129287
NE-II851233
Delhi-NTR374591
Odisha18001185
Punjab40232746
Rajasthan53852456
Inspection Circle413
Tamilnadu61786922
TS, Kolkata14035
TF, Jabalpur306290
TF, Kolkata533218
TF, Mumbai283280
UP East41922883
UP West29322602
Uttarnchal940472
BSNLCO9370
                                                                                 56788                                    48992
Name- SSACircleVote- NFTEVote- BSNLEU
STP,ChennaiSTP,Chennai3736
Surendra NagarGujarat77175
AmreliGujarat19240
BolangirOdisha5348
MungerBihar13425
BetiaBihar4211
SasaramBihar10054
MotihariBihar6254
AraBihar19551
BhandaraMaharastra105140
BeedMaharastra11957
GadchiroliMaharastra2544
LaturMaharastra11870
OsmanabadMaharastra5761
Parbhani
Maharastra74105
HazariBaghJharkhand19635
RanchiJharkhand330
DumkaJharkhand10454
DaltonganjJharkhand5244
CGM officeJharkhand7429
DhanbadJharkhand29058
JamshedpurJharkhand264293
BilasurChhatisgarh175131
AmbikapurChhatisgarh3127
BastarChhatisgarh6939
DurgChhatisgarh121153
RaipurChhatisgarh397156
CGM officeChhatisgarh4339
BathindaPunjab200166
HoshiarurPunjab144120
SangrurPunjab178172
Pathankot
Punjab293236
RoparPunjab8850
JullandharPunjab467449
MathuraUP West16784
AligarhUP West176377
BareillyUP West177249
BijnaurUP West9291
BudaunUP West5136
BulandsaharUP West11781
EtahUP West7651
Ghaziabad SSAUP West279441
ALTTC,GhaziabadUP West3574
MeerutUP West263286
CGM OfficeUP West3897
MoradabadUP West174216
NoidaUP West56146
PilibhitUP West460
RampurUP West4455
SaharnpurUP West19077
MainpuriUP West1139
EtawahUP West5438
KanpurUP East546560
FarrukabadUP East1205
AmbalaHaryana532387
KarnalHaryana240350
SoniatHaryana55109
HissarHaryana297251
FaridabadHaryana207166
GurgaonHaryana96175
RewariHaryana2397
RohtakHaryana155167
JindHaryana9291
                


    







Wednesday, April 17, 2013

NFTE - BSNL 
தஞ்சை மாவட்ட வாக்குப் பதிவு நிலவரம் 

மொத்த வாக்காளர்கள் :        803
வாக்களித்தவர்கள்:               793 
வாக்களிக்காதவர்கள்:             10  

கோட்ட  வாரியாக:        98.7 %
                                                      வாக்கு 
                    மொத்த             வாக்கு             அளிக்கா
    கோட்டம்         வாக்குகள்     அளித்தவர்கள்    தவர்கள்

தஞ்சை                         403                400                     3

திருவாரூர்                   154               154                     --

மன்னார்குடி                 101                 99                     2

பட்டுக்கோட்டை       82                  79                     3

திருத்துறைபூண்டி     63                  61                      2

             18-04-2013   அன்று காலை 10 மணிக்கு தஞ்சை GM  அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

             சரிபார்ப்பு தேர்தலில் ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.   குறிப்பாக கூட்டணிச் சங்கத் தோழர்களுக்கும், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும், பொருளுதவி, உடலுழைப்பு தந்த தோழர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.    

வாழ்த்துக்களுடன், 
தஞ்சை மாவட்டச் சங்கம்.         

Sunday, April 14, 2013

ஜென்மச் சனி விலகிடும் 
நல்வழி பிறந்திடும்  
BSNL க்கும் போனஸ் உண்டு என்ற நிலையை NFTE தான்  கொண்டு வந்தது.  பிறகு இந்தியாவிலேயே அதிக போனஸ் பெற்ற நிறுவனம் BSNL  என்ற மாற்றத்தையும் NFTE  தான் கொண்டு வந்தது.
இன்றைய நிலை:
BSNL க்கு போனஸ் இல்லை.  அதிலும் இந்தியாவிலேயே BSNL க்கு மட்டும்தான் போனஸ் இல்லை.  இந்த ஒரு அவமானம் போதாதா!   BSNLEU  வை அகற்றிட.
இயலாமையும்  முடியாமையும் இருப்பதையும்  அழிக்கும் என்பது எவ்வளவு சரியா இருக்கு பாருங்க!
தொடர்ந்து வெற்றி பெற்றவன் சாதனையாளன் என்றால் மத்தியில் ஆளுகின்ற காங்கிரசும், ஆண்ட BJP  யும் தொடரலாமா! தொடர்வது நல்லதா!!   குறுக்கு வழியில் வென்றவர்கள் தொடர்ந்ததும் இல்லை - தொடர விட்டதும் இல்லை.
வெட்டத் தெரியாதவன் கையில உள்ள கத்திக்கு சாணை புடிச்சாலும் சரி, புடிக்காட்டியும் சரி. ஒரு பயனுமில்லை.  இந்த நிலையில்  அங்கீகாரத்த வச்சு அபிமன்யு வால் என்ன செய்ய முடியும்.   30 கோடியிலே கட்டடம் மட்டும் கட்ட முடியும். 

சரி!  இந்த முறையும் நாங்கள்தான் ஜெயிப்போம் என்கிறதே BSNLEU!
எதற்காக?  போஸ்டல் ED யைப்போல BSNL தொழிலாளியையும் காவு கொடுக்கவா!   

அடுத்து பாருங்க,
ஒன்றா!  இரண்டா!!  நாற்பத்தைந்தாயிரம் கோடி ரூபாயை காத்து, அதிலேர்ந்து நாலாயிரம் கோடி வட்டியும் சம்பாதிச்சதே BSNL, அதை அப்படியே இல்லாமல் பண்ணியதே அதற்காகவா  EU மறுபடியும் ஜெயிக்கணும்.

அத விட வயித்தரிச்சல், BSNL க்கு 10000 கோடி வருஷ வருமானம் NFTE  இருந்த வரைக்கும் வந்து கொண்டிருந்ததே!  அது இப்ப என்னாச்சு> 10000 கோடியும் இல்லாம போனதோடவாவது உட்டுச்சா!  10000 கோடி நஷ்டத்துல வேறல்ல போச்சு. சனி சக்கரம் கட்டில்ல  அடிக்குது. 
இதெல்லாம் தெரிஞ்சதுதானேங்கரீங்களா!   தாங்க முடியாத வேதனையை திரும்பத் திரும்ப சொல்லித்தானே ஆத்திக்க  வேண்டியிருக்கு.

EU சங்கத் தோழர்கள் முன்ன  NFTEக்கு உள்ளே  இருந்து கொடச்சல் கொடுத்த காலத்திலேயே எவ்வளவு மாற்றத்த, உயர்வை, மேல, மேல அப்படியே ஒசக்க கொண்டு போய்க்கிட்டே இருந்தமே! அது இப்ப என்னாச்சி.   EU  சனி சங்கு சக்கரம் சுத்தி  அனைத்தையும் தரை மட்டமாக்கிடுச்சி!
NFTE காலத்திலே ஒரு தாழ்வு, ஒரு இறக்கம், நஷ்டம் ஏதாவது இருந்ததா!  BSNLEU  மாதிரி ஊழியரை ஏமாத்துற வாக்குறுதிதான் எதுனாலும் குடுத்துச்சா சொல்லுங்க.  
எனவேதான் தோழர்களே! அடக்கமும் ஆற்றலும் கொண்ட NFTE சங்கத்திற்கு வாக்களிப்பது ஒன்றுதான் நமக்கும் நமது துறைக்கும் வாழ்வளிக்கும்.   அதுதான் அனைத்தையும் உருவாக்கும்!  
 கோடிக்கால் பூதமடா!  தொழிலாளி கோபத்தின் ரூபமடா!!
 குடந்தை கலியமூர்த்தியின் உணர்சிக் கொந்தளிப்பு உடல் கோளாறை  புறந்தள்ளியது.    NFTE  அது எதனையும் சாதிக்கும்.

Thursday, April 11, 2013

தேர்தல் திருவிழா 
நிறைவுக் கூட்டம் 

12-04-2013 வெள்ளி காலை 10 மணிக்கு 

தஞ்சை பொது மேலாளர் 
அலுவலக வளாகத்தில் 
எழுச்சிப் பேருரையாற்ற வருகிறார் 

நமது முன்னாள் அகில இந்திய செயலர் 

தோழர். R . K அவர்கள் 

திரளாய் வருக தோழர்களே!
நிறைவுரை 

தோழர்ஆர்.கே.,

தோழர்களே!  வருக!


 9 ஆண்டு தொல்லை தொலைந்திட 
                    வரிசை எண்  15 ல் வாக்களிப்போம்!
                                                          ஏப்ரல் 16 நமக்கு  என்றும் 16!

பட்டுக்கோட்டை தேர்தல் பிரசார 
சிறப்புக் கூட்டம் 

       வெகு சிறப்பாக நடைபெற்ற தேர்தல் பிரசார சிறப்புக் கோட்டத்தில் 100 க்கு மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர்.  
   
       அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலர் தோழர். கெஜராஜநிதி  அவர்கள்  சிறப்புரையாற்றினார்.   அண்ணா தொழிற்சங்க மாநில துணைத் தலைவர் தோழர். சுந்தரராஜ் , தோழர் கிருஷ்ணாஜி, கே. நடராஜன்,  நமது மாவட்டச் செயலர் தோழர் T. பன்னீர்செல்வம், கிள்ளிவளவன், தஞ்சை LCP, தஞ்சை கலைச்செல்வன், கூத்தாநல்லூர் பன்னீர்செல்வம், விஷ்ணுகுமார் TTA மற்றும் பல தோழர்கள் பங்கேற்று விளக்கவுரையாற்றினார்கள்.   

கூட்ட நிகழ்வு படக் காட்சிகள் கீழே:

Monday, April 8, 2013


NFTE - BSNL பட்டுக்கோட்டை கோட்டம் 
தேர்தல் பிரச்சார சிறப்புக் கூட்டம் 


நாள்: 10-04-2013 புதன்கிழமை  மாலை 5 மணி  
   
இடம்: அஞ்சலகச் சாலை தொலைபேசியகம், பட்டுக்கோட்டை. 

தலைமை: 
தோழர். S. சிவசிதம்பரம்

முன்னிலை:தோழர்கள் 

R. கிருஷ்ணாஜி, அண்ணா தொழிற்சங்கம், திருச்சிற்றம்பலம்
  
S. கிருஷ்ணமூர்த்தி, கிளைச் செயலர், அதிராம்பட்டினம். 

A. சுப்பையன், கிளை செயலர், பேராவூரணி 

R. செல்வகுமார், பட்டுக்கோட்டை.

வரவேற்புரை: 
தோழர் C. சுந்தரராஜன் கிளைச் செயலர், பட்டுக்கோட்டை 

துவக்கவுரை:
  தோழர். K. நடராஜன் மாநில துணைச்  செயலர்  

சிறப்புரை: 

தோழர். S. கெஜராஜநிதி அவர்கள் 
 தஞ்சை மாவட்டச் செயலர் அண்ணா தொழிற்சங்கம் 

தோழர். S.C. ராஜேஸ்வரன் அவர்கள்  
தஞ்சை மாவட்டச் செயலர் SNATTA  

தோழர். தங்க. ஜெயராஜ் அவர்கள் 
 தஞ்சை மாவட்டச் செயலர், AIBCTES  

வாழ்த்துரை:  

S. பிரின்ஸ் மாவட்டத் தலைவர் 
T. பன்னீர்செல்வம் மாவட்டச் செயலர் 
T. பக்கிரிசாமி மாவட்டப் பொருளர் 
K. கிள்ளிவளவன் மாவட்டச் செயலர், TMTCLU 

பிரசாரக் குழுத் தலைவர்கள்
D. கலைச்செல்வன் மாவட்டத் தலைவர், TMTCLU 
 S. சீனிவாசன் TTA            M. ஜெயராமன் TM    
G. சுந்தரமூர்த்தி Sr.TOA  P. மதனகோபால் TM
     V. கௌரிசங்கர் TM    ஆகியோர்.
மற்றும் 
அனைத்து மாவட்ட, கிளைச் சங்க பொறுப்பாளர்கள். 
நன்றியுரை: V. தனராஜ் கிளைத் தலைவர், பட்டுக்கோட்டை.
அனைவரும் வருக! 

      








செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR