தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Monday, November 24, 2014

NFPTE
சம்மேளன வைரவிழா
22-11-2014 அன்று புதுவை சாய்பாபா திருமண மண்டபத்தில் மதியம் 02:30மணிக்கு கொடியேற்றத்துடன் விழா இனிதே துவங்கியது. தேசிய கொடியை மூத்த தோழர் சேலம் M.S. அவர்களும்சம்மேளன கொடியை 68 போராட்ட தியாகி தோழர் சுவாமிநாதனும் ஏற்றினர்.
தோழர் M.லட்சம் மாநில தலைவர் தலைமையேற்க ,
தோழர்கள் K.அசோகராஜன், P.சென்னகேசவன் வரவேற்க,
தோழர் V.லோகநாதன் அஞ்சலியுரை நிகழ்த்த ,
தோழர் K.சேது துவக்கவுரை ஆற்றினார். விழாவில்
தோழமை சங்க தலைவர்கள்
S.செல்லப்பா.  அகிலஇந்திய துணை செயலர்-BSNLEU,
A. பாபு ராதாகிருஷ்ணன்.மாநில செயலர்- BSNLEU,
D.சந்திரசேகரன். மாநில செயலர்-FNTO,
A.செல்லப்பாண்டியன். மாநில செயலர்-TEPU,
M.கோபிநாதன்.மாநில செயலர்-SNEA,
S.சிவகுமார். மாநில செயலர்-AIBSNLEA,
திரு. குணசேகரன் மாநில சங்க நிர்வாகி-AIBSNLOA,
P.N.பெருமாள். மாநில செயலர்-SEWA
, D.சிவசங்கர்.மாநில தலைவர்.SNATTA, முன்னாள் மாநில செயலர் தோழர்S.தமிழ்மணிதோழர். தினேஷ் பொன்னையா AITUC ஆகியோர் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர். மாநிலத்தின் பல்வேறு  மாவட்டத்திலிருந்து பெரும்பாலான தோழர்களும்தோழியர்களும் 600க்கும் மேற்பட்டோர் விழாவில் பங்கேற்றனர். விழாவில் செப்.1968 ல் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற  
மூத்த தோழர்கள் கவுரவிக்கப்பட்டனர். தோழர்கள்.R.பட்டாபிராமன்.மாநிலசெயலர்,
சம்மேளன செயலர்கள் G.ஜெயராமன். S.S.கோபாலகிருஷ்ணன். ஆகியோர் சிறப்புரையாற்ற
தோழர்.ஆர்.கே நிறைவுரையாற்றி விழாவை முடித்துவைத்தார்.
வழக்கம் போல ஒலிக்கதிர் பொன்விழாவை போல் குழுபோக்கு நீடித்திருந்தது. கடலூர் தோழர்கள் 90 பேர் கலந்து கொண்டனர். விழாவினை குறுகிய காலத்தில் நடத்திய மாநில சங்கத்திற்கும்விழாவை ஏற்று சிறப்பான முறையில் நடத்தி தந்த
புதுவை மாவட்ட செயலர் தோழர் P.காமராஜ்,
சங்க முன்னணிதோழர். N.செல்வரங்கன் குழு தோழர்களுக்கும் 
கடலூர் மாவட்ட சங்கம் வாழ்த்துக்களையும்,வீர வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.
















No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR