தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Saturday, September 26, 2015


இணைய சேவை வேகம் 4 மடங்கு அதிகமாகிறது: பிஎஸ்என்எல்

கோப்புப் படம்
மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், தனது இணைய சேவையை அக்டோபர் 1-ம் தேதி முதல் 4 மடங்கு அதிகமாக்கவுள்ளது.
இது தொடர்பாக பிஎஸ்என்எல் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது நொடிக்கு 512kpbs வேகத்தில் இணையச் சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில், பிரதமரின் டிஜிட்டல் இந்தியா சேவையின் அடிப்படையில் தற்போதைய இணையச் சேவையின் வேகத்தை 4 மடங்கு அதிகமாக்கப்படவுள்ளது. அதன்படி, பிஎஸ்என்எல் இணையச் சேவை 2 எம்பிபிஎஸ் வேகத்தில் வழங்கப்படும்.
விநாயகர் சதுர்த்தி சலுகை
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிஎஸ்என்எல் நிறுவனம் புது வசந்தம் என்னும் சேவையை அறிமுகப்படுத்துகிறது.
இந்த சேவையின்படி, பிஎஸ்என்எல் ப்ரீ-பெய்டு லைஃப் டைம் சிம் கார்டினை ரூ.15 க்கு வாங்கிக் கொள்ளலாம். இந்த சிம் கார்டின் மூலம் 1000 நிமிடங்களுக்கு அழைப்புகளை இலவசமாக பேசிக் கொள்ளலாம். அதற்கான காலக்கெடு 3 மாதங்கள் ஆகும். மேலும், சிம் வாங்கிய முதல் 3 மாதத்துக்கு 0.8 பைசா மட்டுமே அழைப்புக்கான கட்டணமாக வசூலிக்கப்படும்.
சிம் வாங்கியதும், மாதம் ஒன்றுக்கு 25 இலவச எஸ்எம்எஸ் என முதல் 3 மாதங்களுக்கு அனுப்பிக் கொள்ளலாம். அதுமட்டுமன்றி, 50 எம்பி இணையச் சேவையை முதல் மாதம் இலவசமாக வழங்கப் படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR