தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Tuesday, April 26, 2016


கருணை அடிப்படை 
பணி நியமன விதிகள் தளர்வு 

கருணை அடிப்படையிலான பணி நியமன விதிகளைத் தளர்த்தி 
BSNL நிர்வாகம் 21/04/2016 அன்று உத்திரவிட்டுள்ளது. 
விதிகளைத் தளர்த்தியதாக நிர்வாகம்  கூறினாலும்
 ஓரிரண்டைத் தவிர பழைய முறையே தொடர்கிறது.

  • புதிய விதிமுறைகள் 01/04/2016 முதல் அமுலுக்கு வரும்.
  • ஊழியர் இறந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • 55 மதிப்பெண்கள் பெறாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • விதவைகள் விண்ணப்பித்தால் 15 மதிப்பெண் வழங்கும் முறை தொடர்கிறது.
  • மாத வருமானம் ரூ.1000/=க்கு மேல் உள்ளவர்களுக்கு எதிர்மறை மதிப்பெண் வழங்கப்படும். அதிகபட்ச எதிர்மறை மதிப்பெண் 5 ஆகும்.
  • வாடகை வீட்டில் இருந்தால் 5 மதிப்பெண். சொந்த வீட்டில் இருந்தால் மதிப்பெண் கிடையாது. 
  • வெளி ஆளெடுப்பில் 5 சத காலியிடங்களே  நிரப்பப்படும்.
கருணை அடிப்படை பணி நியமனத்தில் 
குறிப்பிடத்தக்க தளர்வுகள் ஏதுமில்லை என்பதே இன்றைய நிலை.
எனவே சாதனைப் பட்டியலில் இவை இடம் பெற வாய்ப்பில்லை.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR